Friday, September 20, 2013

சொல் அந்தாதி - 2



சொல் அந்தாதி - 2 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.    உத்தம புத்திரன்         -  காத்திருப்பான் கமலக் கண்ணன் 
2.    வெண்ணிற ஆடை            
3.    பணமா பாசமா 
4.    கந்தன் கருணை 
5.    அதிசயத் திருடன் 

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் அந்தாதி - 1 புதிருக்கான விடைகள்: 
1. ரோஜா                         - சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
2. ஆனந்தம்                    - ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே   
3. இதய வீணை             - ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன 
4. வெண்ணிற ஆடை   - என்ன என்ன வார்த்தைகளோ சின்னவிழி பார்வையிலே    
5. சிங்கம் - II                 - புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   Madhav,  10அம்மா,  மதுமதி 
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள்.  நன்றி.        
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. மதுமதி,

    எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete