Saturday, March 15, 2014

சொல் வரிசை - 60


சொல் வரிசை - 60 புதிருக்காக, கீழே   8 (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   பெரிய இடத்துப் பெண் (--- --- --- --- தூண்டில் போடும் கண்களெங்கே)
2.   கீதாஞ்சலி  (--- --- --- சின்ன குயில் இசை கேட்டு) 
3.   ரட்சகன் (--- --- --- என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்)
4.   பிரியமான தோழி (--- --- --- பெண்ணாகிய ஓவியம்)
5.   கல்யாணியின் கணவன் (--- --- சொல்ல முடியாது)
6.   குலவிளக்கு  (--- --- --- --- ---- பால் குடிக்கின்ற நேரம் அல்லவா)
7.   பாலும் பழமும் (--- --- --- இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா)
8.   பட்டத்து யானை (--- ---  --- --- --- கண்ணை விட்டு கண்ணை விட்டு) 
 
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 59 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   அரசிளங்குமரி (சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா)
2.   பயணங்கள் முடிவதில்லை (மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து) 
3.   ஆண் பாவம் (குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே)
4.   சாரதா (மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு)
5.   ஆசை (1956) (வரும் காலம் நல்ல காலம் புது வாழ்வு நாம் காணவே)
6.   கடவுள் அமைத்த மேடை  (மயிலே மயிலே உன் தோகை எங்கே)

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
சின்ன மணிக் குயிலே  
மெல்ல வரும் மயிலே                             
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:    அம்மன் கோயில் கிழக்காலே  
         
சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 

1.    முத்து சுப்ரமண்யம்   
2.    மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  



ராமராவ்

2 comments:

  1. 1. பெரிய இடத்துப் பெண் (துள்ளி ஓடிடும் கால்களேங்கே தூண்டில் போடும் கண்களெங்கே)
    2. கீதாஞ்சலி (துள்ளி எழுந்தது காத்து சின்ன குயில் இசை கேட்டு)
    3. ரட்சகன் (போகும் வழி எல்லாம் காத்தே என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்)
    4. பிரியமான தோழி (பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்)
    5. கல்யாணியின் கணவன் (சொல்லித் தெரியாது சொல்ல முடியாது)
    6. குலவிளக்கு (கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா பால் குடிக்கின்ற நேரம் அல்லவா)
    7. பாலும் பழமும் (போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா)
    8. பட்டத்து யானை (என்ன ஒரு என்ன ஒரு அழகியடா கண்ணை விட்டு கண்ணை விட்டு)

    இறுதி விடைகள்:
    பாடல்: துள்ளி துள்ளி போகும் பெண்ணே சொல்லிக் கொண்டு போனால் என்ன

    படம்: வெளிச்சம்

    ReplyDelete
  2. 1. பெரிய இடத்துப் பெண் - துள்ளி ஓடும் கால்கள் எங்கே
    2. கீதாஞ்சலி - துள்ளி எழுந்தது பாட்டு
    3. ரட்சகன் - போகும் வழியெல்லாம் காற்றே
    4. பிரியமான தோழி - பெண்ணே நீயும் பெண்ணா
    5. கல்யாணியின் கணவன் - சொல்லி தெரியாது சொல்ல முடியாது
    6. குலவிளக்கு - கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா
    7. பாலும் பழமும் - போனால் போகட்டும் போடா
    8. பட்டத்து யானை - என்ன ஒரு என்ன ஒரு அழகியடா

    இறுதி விடை :
    துல்லித துள்ளிப் போகும் பெண்ணே
    சொல்லிக் கொண்டு போனால் என்ன
    - வெளிச்சம்

    ReplyDelete