Wednesday, April 9, 2014

சொல் அந்தாதி - 23


சொல் அந்தாதி  -  23     புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  செல்வ மகள்  -  அவன் நினைத்தானா இது நடக்கும் என்று
                  
2.  கப்பலோட்டிய தமிழன்                               
 
3.  எனக்காக காத்திரு                      
 
4.  ஆனந்த ராகம்                      

5.  குட்டிப்புலி                        
      
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  22  புதிருக்கான குறிப்புகள் :   
1.  இது நம்ம ஆளு  -  காம தேவன் ஆலயம் அதில் காதல் தீபம் ஆயிரம்

2.  கரிசக்காட்டுப் பூவே  - ஆயிரம் கோடி சூரியன் போலே

3.  ஓடங்கள்  - பூவே என்ன போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
 

4.  வீரபாண்டிய கட்டபொம்மன் - போகாதே போகாதே என் கணவா

5.  பிரிவோம் சந்திப்போம் - கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்        
            
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: 
1.  முத்து சுப்ரமண்யம் 
2.  மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.  நன்றி.
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. 1. செல்வ மகள் - அவன் நினைத்தானா இது நடக்கும் என்று
    2. கப்பலோட்டிய தமிழன் - என்று தணியும் இந்த
    3. எனக்காக காத்திரு - தாகம் எடுக்குற நேரம்
    4. ஆனந்த ராகம் - மேகம் கருக்குது மழை வரப் பாக்குது
    5. குட்டிப்புலி - காத்து காத்து

    ReplyDelete
  2. 1. செல்வ மகள் - அவன் நினைத்தானா இது நடக்கும் என்று

    2. கப்பலோட்டிய தமிழன் - என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

    3. எனக்காக காத்திரு - தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம்

    4. ஆனந்த ராகம் - மேகம் கருக்குது மழை வரப் பாக்குது

    5. குட்டிப்புலி - காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது

    - by Madhav

    ReplyDelete