Saturday, June 28, 2014

சொல் அந்தாதி - 28

 
சொல் அந்தாதி  -  28     புதிருக்காக, கீழே  5  (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  பெரிய இடத்துப் பெண்   -  அன்று வந்ததும் இதே நிலா
 
2.  வைகை
 
3.  அடுத்த வாரிசு 
 
4.  வாய்ச் சொல்லில் வீரனடி
 
5.  வேட்டைக்காரன் (NEW)  
 
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

1 comment:


  1. 1. பெரிய இடத்துப் பெண் - அன்று வந்ததும் இதே நிலா

    2. வைகை - நிலா நிலா வா

    3. அடுத்த வாரிசு - வா ராஜ வந்து பாரு

    4. வாய்ச் சொல்லில் வீரனடி - பாரு என்னை நான் உன்னோட அன்னக்கிளி

    5. வேட்டைக்காரன் (NEW) - புலி உறுமுது புலி உறுமுது

    By Madhav.

    ReplyDelete