Sunday, October 9, 2016

சொல் அந்தாதி - 55


சொல் அந்தாதி - 55   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  ராஜபார்ட் ரங்கதுரை - மதன மாளிகையில்      
  
2.  தாம் தூம்              

3.  சட்டம் ஒரு விளையாட்டு                    

4.  தலைப்பு செய்திகள்                  

5.  கடன் வாங்கி கல்யாணம்                


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

2 comments:

  1. 1. ராஜபார்ட் ரங்கதுரை - மதன மாளிகையில்

    2. தாம் தூம் - அன்பே என் அன்பே

    3. சட்டம் ஒரு விளையாட்டு - சுகம் தரும் நிலா என்னை

    4. தலைப்பு செய்திகள் - வரும் ஆவணி திருமண மாதம்

    5. கடன் வாங்கி கல்யாணம் - போதும் உந்தம் ஜாலமே

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 10.10.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
    சுகம் தரும் நிலா
    வரும் ஆவணி திருமண மாதம்
    போதும் உந்தன்

    ReplyDelete