Friday, January 27, 2017

சொல் வரிசை - 156



சொல் வரிசை - 156 புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    போலீஸ்காரன் மகள் (---  ---  ---  ---  நெருப்பாய் எரிகிறது)
  
2.    உன்னை நான் சந்தித்தேன் (---  ---  --- என் கண்ணில் தூக்கம் போனதே) 

3.    பாட்டு வாத்தியார் (---  ---  நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே) 

4.    செந்தமிழ் செல்வன் (---  ---  உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து) 

5.    பாவை விளக்கு (---  ---  ---  சிரிப்பேன் சிங்காரக் கண்ணே

6.    என் அருகே நீ இருந்தால் (---  ---  ஆடு காலெடுத்து) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:


  1. 1. போலீஸ்காரன் மகள் - நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

    2. உன்னை நான் சந்தித்தேன் - தாலாட்டு மாறிப் போனதே

    3. பாட்டு வாத்தியார் - சோலை மலரே

    4. செந்தமிழ் செல்வன் - குயிலே இளமாங்குயிலே

    5. பாவை விளக்கு - நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

    6. என் அருகே நீ இருந்தால் - பாடு பாட்டெடுத்து

    - இறுதி விடை :
    நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு
    - புது மனிதன்

    by மாதவ்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துறைவேலு 28.1.2017 அன்று அனுப்பிய விடை:

    நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
    தாலாட்டு மாறிப் போனதே
    சோலை மலரே
    குயிலே இளமாங்குயிலே
    நீ சிரித்தால் நான்
    பாடு பாட்டெடுத்து

    நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு

    திரைப்படம். புது மனிதன்.

    ReplyDelete