Tuesday, January 31, 2017

சொல் அந்தாதி - 69



சொல் அந்தாதி - 69   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  கடன் வாங்கி கல்யாணம் - எங்கிருந்து வீசுதோ    
  
2.  குங்குமக்கோடு                      

3.  மக்கள் என் பக்கம்             

4.  காத்திருக்க நேரமில்லை
                            
5.  உத்தம புத்திரன்                             


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

2 comments:

  1. 1. கடன் வாங்கி கல்யாணம் - எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

    2. குங்குமக்கோடு - தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது

    3. மக்கள் என் பக்கம் - மானே பொன்மானே விளையாட வா

    4. காத்திருக்க நேரமில்லை - வா காத்திருக்க நேரமில்லை

    5. உத்தம புத்திரன் - முல்லை மலர் மேலே

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 1.2.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
    மானே பொன்மானே
    வா காத்திருக்க நேரமில்லை
    முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே

    ReplyDelete