Wednesday, March 8, 2017

சொல் அந்தாதி - 74



சொல் அந்தாதி - 74   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  அம்பிகாபதி - சிந்தனை செய் மனமே   

2.  மச்சி    

3.  சூர சம்ஹாரம்    

4.  இனி எல்லாம் சுகமே   

5.  ஏழை பங்காளன் 
                              


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

2 comments:


  1. 1. அம்பிகாபதி - சிந்தனை செய் மனமே

    2. மச்சி - மனமே ஏன் மயக்கம்

    3. சூர சம்ஹாரம் - நான் என்பது நீ அல்லவோ

    4. இனி எல்லாம் சுகமே - தேவி எனக்காக காதல் பரிசாக

    5. ஏழை பங்காளன் - தாயாக மாறவா தாலாட்டு பாடவா

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 8.3.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    மனமே ஏன் மயக்கம்
    நான் என்பது நீ அல்லவோ
    தேவி எனக்காக ஆயுள் பரிசாய்
    தாயாக மாறவா தாலாட்டு பாடவா

    ReplyDelete